வெள்ளி, 28 டிசம்பர், 2018

பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவியரின் 'பெண்கள் சுவர்'

மாட்டுச்சாணத்தை தெளித்து  புனிதப்படுத்திய பிற்போக்கு ஏபிவிபி




கொச்சி, டிச.22 வழிபாட்டு இடங்களில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துகின்ற கேரள மாநில அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு அளிக்கும் வகையில் பெண்கள் சுவர் எனும் பெயரில் மாணவியர் கரங்களை இணைத்துக்கொண்டு  மனித சங்கிலி பரப் புரை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட் வரை இப்பரப்புரை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையில் லட் சக்கணக்கிலான பெண்கள் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை அளிக்கின்றனர். இப்பரப்புரையை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கம் நடத்திவருகிறது.

கேரள மாநிலத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாயர் சர்வீஸ் சொசைட்டி இந்து கல்லூரி தலை மையகத்தில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி சுமார் 350 மாணவிகள்  ஒன்றிணைந்த வனிதா மதில் எனும்  பெண்கள் சுவர் மனித சங்கிலி பரப்புரை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தின் வெளியே சுற்றுச்சுவரையொட்டி மாணவியர் பதாகைகளை ஏந்தி சிறிதுநேரம் மனித சங்கிலி அமைத்து பரப்புரை மேற்கொண்டனர். அதன்பின்னர் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

கல்லூரி வளாகச் சுற்றுச்சுவரையொட்டி சாலையோரத்தில் இந்திய மாணவர் சங் கத்தின் சார்பில் மாணவியர் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகள், பலூன்களை ஏந்தி பெண்கள் சுவர் மனித சங்கிலி அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். மீண்டும் கேரளாவை புகலிடமாக்காதீர், மாணவர் ஒற்றுமைக்கான பெண்கள் சுவர்  என்கிற வாசகங்களைக் கொண்ட பெரிய பதாகையை மாணவிகள் ஏந்தியிருந்தார்கள்.

பெண்கள் சுவர் (மனித சங்கிலி) பரப்புரை நடைபெற்ற பகுதியிலேயே அக்கல்லூரியின் மற்றொரு பிரிவாகிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி அமைப்பினர்   சிறிதுநேரத்தில், அப்பகுதியில் மாட்டுச் சாணத்தைத் தண் ணீரில் கரைத்து தெளித்து தீட்டு கழித்து புனிதப்படுத்தினார்களாம். அச்செயலை படமாக ஏபிவிபியினர் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

மன்னாது பத்மநாபனின் (கல்லூரி நிறுவனர்) மண்ணில் ஏபிவிபியின் சார்பில் புனிதப்படுத்தப்பட்டது. பினராயினுடைய இந்திய மாணவர் சங்கத்தினர் பெண்கள் சுவர் (மனித சங்கிலி) அமைத்து நம்முடைய கலாச்சாரத்தை பாழ்படுத்தி விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் பகுதி செயலாளர் சுபின் சாபு கூறியதாவது:

ஒரு பகுதிக்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைந்தாலோ,தொட்டுவிட்டலோஉயர் ஜாதி இந்துக்கள் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளித்து தீட்டு கழிப்பார்கள். அதுபோல், ஏபிவிபி அமைப்பினர் பார்ப் பனியத்தை தங்களின் செயல்மூலமாக செயல்படுத்தியுள்ளனர். ஏனென்றால், மறுமலர்ச்சிக்கான பரப்புரை மற்றும் பிற முற்போக்கு இயக்கங்களின் பரப்புரைகளால் ஆத்திரமடைந்ததாலேயே இதுபோன்று செய்துள்ளார்கள் என்றார்.

கோட்டயம் மாவட்ட இந்திய மாணவர் சங்க இணை செயலாளர் ஜஸ்டின் ஜோசப் கூறியதாவது:

இப்பரப்புரையில் கலந்துகொள்ள மாணவியர் பெரிதும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், ஏபிவிபி அமைப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். இந்திய மாண வர் சங்கம் பரப்புரை நடத்தும் இடங் களில்ஏபிவிபிஉள்ளிட்டஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எதிர்ப்புறமாக நின்று எங்கள் பரப்புரைக்கு ஆதரவளிக்க வரு வோருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். கல்லூரி நிர்வாகமும் ஏபிவிபிக்கு ஆதரவாக எங்கள் பரப்புரையில் பங்கேற்கின்ற மாண விகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அடக்குமுறையைக் கையாள்கிறது. இந்த பரப்புரை எப்போதுமே வகுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாக நடத்தப் படுகிறது என்றார்.

- விடுதலை நாளேடு, 22.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக