வியாழன், 1 ஜனவரி, 2015

ஈரோட்டில் 45 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்


ஈரோடு, அக். 26_ பெண் ணின் திருமண வயதை உயர்த்த வேண்டும், என, நீதிமன்றங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய் துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடப் பாண்டு, தடுத்து நிறுத்தப் பட்ட, குழந்தைத் திரும ணங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித் துள்ளது.
தமிழகத்தில், பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் போன்ற பெண் குழந்தைகளுக்கான கொடுமை, தென்மாவட் டங்களில் உசிலம்பட்டி மற்றும் சேலம், கிருஷ்ண கிரி, தருமபுரி மாவட்டங் களில் தான், அதிகளவில் நடப்பது வழக்கம். ஈரோடு மாவட்டத்தில், 18 வய துக்கு முன்பே, பெண்க ளுக்கு திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்து வரு கிறது. 'பெண்ணுக்கு திரு மண வயது, 18, என, எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
உடல், உளவியல் ரீதியாக, திரு மணத்துக்கு தயாராகி விட்டனரா என, கண்டிப் பாக எப்படி கூற முடியும். பெண்ணுக்கும், 21 வயதாக நிர்ணயிப்பது குறித்து, முடிவெடுக்க வேண்டும் என, மதுரை உயர்நீதி மன்ற கிளை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், கடந் தாண்டு, இம்மாவட்டத்தில், 15 குழந்தை திருமணங் கள் நடப்பதாக புகார் வந்த தையடுத்து, சமூக நலத் துறை, வருவாய்த்துறையி னர், திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், 2014 இல் செப்., வரை, 45 குழந் தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் குடும்ப சூழ்நிலை, திருமணம் நடத்தினால், தங்கள் பாரம் குறையும் என்பது உட்பட பல காரணங்களால், குழந்தைத் திருமணம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை கண் காணிப்பாளர் கண்ணன் கூறியதாவது: பெண்ணுக்கு, 18 வயது, ஆணுக்கு, 21 வயதும் நிரம்பினால் மட் டுமே, திருமணம் சட்டப் படி செல்லுபடியாகும். ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டு, 45 குழந் தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலும், பெற்றோர்களிடம், வயது குறித்த சந்தேகத்தினால் தான், இதுபோன்ற திரு மண ஏற்பாடுகள் நடக் கின்றன. 18 வயது முடிந்த வுடன் தான், பெண்ணுக் குத் திருமணம் செய்ய வேண்டும், என, பெற் றோர்களுக்கு தெரிவ தில்லை. 18 வயது துவங் கினாலே, திருமண ஏற் பாடுகளை செய்கின்றனர்.
மலைவாழ் பகுதி மட்டு மின்றி, அனைத்து வட் டாரங்களிலும் குழந்தைத் திருமண ஏற்பாடு நடக் கிறது. புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்து, இது போன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படு கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை,26.10.14.ப8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக