திங்கள், 27 மே, 2024

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ‘தோழி’ தங்கும் விடுதிகள்!



Published May 22, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மே 22- வீட்டிற்குள்ளே முடங்கி அடுப்பறையின் அனல் காற்றை சுவாசித்த பெண்கள் தற் போதுதான் இயற்கைக் காற்றையும் சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் எதிரொலி தான் தங்களது கல்விக்காகவும் வேலைக்காகவும் கடல் கடந்து செல்கின்றனர்.

அப்படி கடல் கடந்து சென்றா லும் பாதுகாப்பில் என்னவோ சில நேரங்களில் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. இப்படி பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு பணி புரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் பணிபுரியும் பெண்களுக் கான மகளிர் விடுதி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.

பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து வேலைக்காகவும், பயிற்சிக்காகவும் சென்னைக்கு வருகை தரும் பெண்கள் இடம் கிடைக்காமல் அல்லல்படுகிறார் கள். அப்படியே கிடைத்தாலும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி யாக உள்ளது.இந்த நிலையில்தான், பெண் கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘தோழி’ என்கிற பெண்கள் விடுதி செயல் பட்டு வருகிறது.இந்த விடுதிகளில் மாவட் டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படு கிறது. தினசரி அடிப்படையில் பெண்கள் தங்கு வதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

அமைந்துள்ள இடங்கள்

இவ்விடுதிகள் சென்னை, செங் கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடு திகள் தொடங்கப்பட்டுள்ளன.

வசதிகள்

சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏசி, லிப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோ வேவ், வாட்டர் கூலரு டன் கூடிய ஆர் ஓ வாட்டர் போன் றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது. குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவ தற்கான விடுதி வழங் கப்படுவதில்லை.

நேரம்

இரவு 10 மணிக்குள் விடுதிக்கு வந்து விட வேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றாற் போல விடுதிக்கு வரலாம்.

கூடுதல் விவரங்களுக்கு

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl. என்ற இணைய தள முகவரியில் மூலம் சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

முழுமையான விபரங்களுக்கு

tnwwhcl.in என்ற இணைய தளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெற லாம். தமிழ்நாடு அரசின் இந்த தோழி இல்லம் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுப்பதால் இந்த இல்லங்களில் தங்கும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

திங்கள், 1 ஏப்ரல், 2024

கருநாடக மாநிலத்தில் மகளிர் நாள் கழகப் பிரச்சார செயலாளர் கருத்துரை



விடுதலை நாளேடு
Published March 16, 2024

உடுப்பி, மார்ச் 16- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கருநாடக மாநில மகளிர் கூட்டமைப்பு 2024 மார்ச் 8 ஆம் நாள் கருநாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி யது. கருநாடக மாநிலத் தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ் விழாவில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார்.

அவர் உரையாற்று கையில் தமிழுக்கும், கன் னட மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப் பிட்டு திராவிடமொழிக ளின் அடையாளம் தமிழ் என் பதையும், இன்றைய சமூக அரசியல் சூழ்நிலை யில் திராவிட மாநிலங்க ளின் ஒற்றுமையை முன் னெடுக்க வேண்டும் என்றும், அதனை பெண்களால் தான் சாதிக்க முடியும் என்றும், ஏனெனில் பெண் கள்தான் எல்லையற்றவர் கள், பெண்களால் ஆண் கள் உருவாக்கிய ஜாதி மத இன மொழிப் பிரிவினைகளை, தடைக ளைத் தாண்டி சிந்திக்க முடியும் என்றும், தந்தை பெரியாரின் சிந்தனை வழியில்தான் தடைக ளைத் தாண்டி சிந்திக்கும், செயல்படும் பெண்கள் உருவாக முடியும் என் றும், இந்தியாவில் பெண் களுக்கெதிராக திட்ட மிட்டு வன்முறையை நிகழ்த்தும் மதவெறி அமைப்புகளை பெண் கள் அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் திராவிட மாநி லங்களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பலத்த கையொலி எழுப்பி வர வேற்றார்கள்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டில் முதல் முறை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக திருநங்கை நியமனம்

 



திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார் கள். சுயதொழில் மட்டுமின்றி ஒன்றிய, மாநில அரசு பணிகளிலும் திரு நங்கைகள் அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகராக திருநங்கை சிந்து 8.2.2024 அன்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இதுதொடர்பாக திருநங்கை களுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் ரயில்வே பணியில் சேர்ந் தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந் தேன். ரயில்வே மின்சாரப் பிரிவில் பணியாற்றினேன்.
இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரப் பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப் பட்டேன். பயணச்சீட்டுப் பரிசோ தகர் பயிற்சியை முடித்து, பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கைகள் மனம் தளர்ந்து விடக்கூடாது.
கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங் கைகள் முன்னேற வேண்டும் என்றார்.

சனி, 10 பிப்ரவரி, 2024

பெண்களுக்கு சம வாய்ப்பு-சம உரிமை-பொருளாதார மேம்பாடு உட்பட்ட புதிய மகளிர் கொள்கை


புதன், 24 ஜனவரி, 2024

புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்


Published November 10, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக ஆறு மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!


விடுதலை நாளேடு,
Published July 24, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட”ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் 

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வளர்ச்சி ஆணையர்,  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

(செய்தி விவரம்: 2 ஆம் பக்கம் காண்க)

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பெண்களே, சட்டங்களை அறிந்து கொள்க!


9

வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புச் சட்டங்கள் ஏராளமாக இருந்த போதிலும், பெண்கள் வெறுங்கையுடன் இருக்கிறார் கள். மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்க வில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏப்ரல் 23, 1985இல், ஷா பானோ பேகம் என்ற ஒரு முஸ்லிம் பெண், தனது கணவரால் விவாகரத்து பெற்றவர்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு மூலம் வாழ்வூதிய உரிமையை பெற்றார். பாதிக்கப்பட்ட, விவா கரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்வூதியம் அளித்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. சமூகத் தலைவர்கள் குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டி, தீர்ப்பு இஸ்லாமிய சட்டத்திற்கு முரண்படுவதாகக் கூறினர்.

அன்றைய அரசாங்கம் பின்னர் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986அய் இயற்றியது. இது ஷிசிஇன் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்தது. விவாகரத்துக்கு 90 நாட்களுக்குப் பிறகு முஸ்லிம் விவாகரத்து பெற்றவர்களின் உரிமைகளை அவர்களின் மேனாள் கணவர்களிடமிருந்து கட்டுப்படுத்தியது. இந்த காலம் இஸ் லாமிய சட்டத்தில் இத்தா என்று அழைக்கப்படுகிறது. பல சர்ச்சைகளைத் தூண்டிய இந்தச் சட்டம், ஷா பானோவை வீட்டுப் பெயராக மாற்றியது.

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பராமரிப்புக்கான கோரிக்கையை வடிவமைப்பதில் நீதிமன்றம் நியாயமாக இருக்கும் என்பது உத்தரவின் முக்கிய அம்சமாகும். வழங்கப் பட்ட நிரந்தர வாழ்வூதியத்தின் அளவு, வழக்குதாரர்களின் நிலை மற்றும் பராமரிப்பு செலுத்தும் வாழ்க்கைத் துணை களின் திறனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நிரந்தர வாழ்வூதியம் செலுத்துவதற்கான அளவுகோல் விகிதத்தை நிர்ணயித்துள்ளது. கணவரின் நிகர வருமானத்தில் 25% வாழ்வூதியமாக நியாயமான மற்றும் சரியான தொகை என்று நீதிமன்றம் கூறியது. விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் நிதிநிலை வாழ்வூதியத்தின் அளவை தீர்மானிக்கும் போது முக்கியமானதாக இருக்கும். எனவே, சவுத்ரிகள் வழக்கில் நீதிமன்றம் நிர்ணயித்த பெஞ்ச்மார்க் ரேட் இங்கே வேலை செய்யக்கூடும் என்று சட்ட ஆதாரம் கூறுகிறது.

பின்னர் நவம்பர் 2020இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, பிரிந்து செல்லும் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்த நாளிலிருந்து கணவர்களிடமிருந்து வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புக்கு உரிமை உண்டு. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கணவரால் பிரிந்து செல்லும் பெண்கள் மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில் இருப்பதாகவும், தங்களையும் தங்கள் குழந்தை களையும் பராமரிக்க வழியின்மையால் அவர்கள் பெரும் பாலும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறி யது. 67 பக்கத் தீர்ப்பில், குடும்ப நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்கள் பின்பற்றுவதற்கான சீரான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இந்த நீதிமன்றங்கள் பராமரிப்பு மற்றும் வாழ்வூதியம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வடிவத்தை இது உருவாக்கியது. மகாராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரிடமிருந்து பிரிந்து, தனக்கும், மகனுக்கும் வாழ்வூதியம் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக் கப்பட்டு வந்தது. பல பராமரிப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்க முடியாமல் பல ஆண்டுகளாக பெண்கள் வெறுங்கையுடன் உள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் கவனித்தது.

நீதிபதி மல்ஹோத்ரா தனது தீர்ப்பில், “விண்ணப்பம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பராமரிப்பு வழங்கப்பட வேண் டும் என்ற கருத்து, பிரிந்து செல்லும் மனைவி மற்றும் சார்ந் திருக்கும் குழந்தைகளை ஏழ்மை மற்றும் அலைச்சலில் இருந்து பாதுகாப்பதே பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை நோக்கம் என்ற நியாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. விண்ணப்பித்த நாளிலிருந்து பராமரிப்புப் பணம் செலுத்தப் படாவிட்டால், பராமரிப்புக் கோரும் தரப்பினர், விண்ணப் பத்தை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நேரத்தின் காரணமாக, வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

வாழ்வூதியம் செலுத்தும் பொறுப்பு நீதிமன்றங்களால் கணவர்களின் மீது தள்ளப்பட்டது. கணவன் தனது பிரிந்த மனைவிக்கு பணம் செலுத்தத் தவறினால், அவர் தனது சொத்துக்களை இணைத்தல் உட்பட சிவில் தடுப்புக்காவலில் அடைவார். மனைவியைப் பராமரிக்கும் தார்மீகக் கடமையி லிருந்து கணவன் விடுபட முடியாது என்று நீதிமன்ற உத்தரவு தெளிவாக இருந்தது. அவர் திறமையானவராகவும் கல்வித் தகுதி பெற்றவராகவும் இருந்தால், தனக்கு வருமான ஆதாரம் இல்லை என்ற கணவரின் வேண்டுகோள், அவருக்கு பரா மரிப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். குழந்தை களின் கல்விச் செலவுகளை பொதுவாக தந்தையே ஏற்க வேண்டும்.

ஆனால், மனைவி வேலை செய்து போதுமான வரு மானம் ஈட்டினால், செலவுகளை இரு தரப்பினரும் விகிதாச் சாரப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி மல்ஹோத்ரா குறிப்பிட்டார். சமகால சமூகத்தில் திருமணங்கள் ஒரு நியாய மான காலத்திற்கு நீடிக்காது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, கணவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் நிரந்தர வாழ்வூதியம் வழங்க உத்தரவிடுவது சமமாக இருக் காது என்றும் நீதிமன்றம் கவனித்தது.

எனவே, வாழ்வூதியம் வழங்கும்போது திருமண காலமும் பரிசீலிக்கப்படும். CrPCஇன் பிரிவு 125 பல ஆண்டுகளாக ஒன்றாக வாழும் இணையினரையும் உள்ளடக்கும் என்று தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேற்கூறிய பிரிவின் கீழ் பராமரிப்பு வழங்குவதற்கு திருமணத் திற்கான கண்டிப்பான ஆதாரம் முன் நிபந்தனையாக இருக்கக் கூடாது.