சனி, 1 ஜனவரி, 2022

மருத்துவராகப் போகும் முதல் பழங்குடியின மாணவி!

 

கல்வி என்பதே பெருங்கனவாக இருக்கும் பழங்குடியின மாணவிமருத்துவராகும் தன் லட்சியத்தின் முதல்படியைத் தொட்டுள்ளார்நீட் தேர்வில் வெற்றிபெற்றதன் மூலம்கல்வியே பெண்களின் முன்னேற்றத்துக்கான கருவி என்பதை நிரூபித்துள்ளார்.

கோவை திருமலையாம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரொட்டிக்கவுண்டனூர் அருகே உள்ளது நஞ்சப்பனூர் கிராமம்இங்கே மலசர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் வசிக்கின்றனகுடிசைகளில் வசிக்கும் அவர்களின் வாழ்வாதாரம்விவசாயக் கூலி வேலை மட்டுமேஇங்கிருந்து பள்ளி சென்றவர்களில் யாரும் 12ஆம் வகுப்பைத் தாண்டவில்லைஇந்நிலையில்அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சங்கவிநீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்இதன்மூலம் அந்தச் சமுதாயத்திலிருந்து மருத்துவராகப்போகும் முதல் மாணவி என்கிற பெருமையை சங்கவி அடைய உள்ளார்.

சங்கவியின் அப்பா முனியப்பன்விவசாயக் கூலித் தொழிலாளிஅம்மா வசந்தாமணி. 10ஆம் வகுப்பு வரை குமிட்டிபதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சங்கவி, 11, 12 வகுப்புகளை பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார்பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 874 மதிப்பெண் பெற்று, 2018இல் முதல்முறையாக நீட் தேர்வெழுதியுள்ளார்அப்போது தேர்ச்சிக்கு 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் வாய்ப்பு தவறிப்போனது. 2018இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கபிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்ஆசிரியர்கள் உதவியுள்ளனர்அப்போதுபள்ளிக் கல்வித்துறை மூலம் கோவை புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மாதம் நடைபெற்ற நீட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சங்கவி பயிற்சி பெற்றுள்ளார்.

அரசின் உதவித்தொகையைக் கொண்டு மட்டுமே படிக்க முடியும் என்கிற சூழலில்தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த சங்கவியிடம் ஜாதிச் சான்று இல்லைபத்து நாட்கள் மட்டுமே அங்கு படித்த அவர்மேற்கொண்டு படிக்கவில்லைசுற்றியிருந்த யாரிடமும் ஜாதிச்சான்று இல்லாததால்அதை ஆவணமாகக் காண்பித்துச் சான்று பெற முடியாமல்போனதுசங்கவிக்குச் ஜாதிச்சான்று பெற அவரது தந்தை இரண்டு ஆண்டுகள் போராடியுள்ளார்.

கரோனா முதல் அலை பரவத் தொடங்கிஊரடங்கு அமலில் இருந்தபோதுநஞ்சப்பனூர் கிராமத்துக்குத் தன்னார்வலர்கள் உதவச் சென்றுள்ளனர்அப்போது சங்கவிக்குச் ஜாதிச்சான்று கிடைக்காதது குறித்து ஊடகங்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி சான்று பெற வழிவகை செய்துள்ளனர்பல தடைகளைக் கடந்து சாதித்துள்ள சங்கவியிடம் பேசினோம்.

2020 மே மாதம்மாரடைப்பால் அப்பா உயிரிழந்துவிட்டார்எனது நிலையை அறிந்துதனியார் நீட் தேர்வு பயிற்சி மய்யத்தில் சேர தன்னார்வலர்கள் உதவினர்.  கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் அங்கு சேர்ந்துஒன்றரை மாதம் பயிற்சி பெற்றேன்கரோனா இரண்டாவது அலையாலும்திறன்பேசி இல்லாத காரணத்தாலும் இணைய வழி பயிற்சி வகுப்புகளைத் தொடர முடியவில்லைநான் பள்ளியில் படித்தபோது இருந்த பாடத்திட்டமும் மாறியிருந்ததுஅம்மாவுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்திருந்த சூழலில்கையில் இருந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள்பயிற்சி மய்யத்தில் அளித்த மெட்டீரியல்களை வைத்து வீட்டிலேயே தேர்வுக்குப் படித்தேன்கரோனா பரவல் குறைந்த பிறகுஒரு மாதம் பயிற்சி மய்யத்திலேயே தங்கி பயின்றேன்அந்தப் பயிற்சி எனக்குக் கைகொடுத்ததுபழங்குடியின மாணவர்கள் மருத்துவ படிப்புப் பயில 108 முதல் 137 மதிப்பெண்கள் கட்-ஆஃப் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்நான் 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால்அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் சங்கவிபழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுககு உரிய வழிகாட்டுதல்களோதொடர்ந்து படிப்பதற்கான ஊக்கமோ கிடைப்பதில்லை என்கிறார்அரசு அதிகாரிகள் எங்களிடம் வந்தால் மட்டுமே அவர்களை அணுகி உதவி கேட்க முடியும் என்கிற சூழல் உள்ளதுஎனவேபழங்குடியின மாணவர்களின் தேவையை நேரடியாகக் கேட்டறிந்து அரசு உதவினால்இன்னும் நிறைய மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள் என்கிறார் சங்கவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக