வியாழன், 28 நவம்பர், 2019

கனடாவில் அமைச்சர் ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்

ஒட்டாவா, நவ. 23- கனடாவில் 338 இடங் களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக் கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.  கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி தகுதியை பிடித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 13 சீக்கிய எம்.பி.க்கள்தான் இருக்கிறார்கள்.  ஆனால் கனடா நாடா ளுமன்றத்தில் 18 சீக்கிய எம்.பி.க்கள் அலங்கரிக்கிறார்கள்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ தனது புதிய அமைச் சரவையை நேற்று முன்தினம் அமைத் தார். இந்த அமைச்சரவையில் முதல் முறை எம்.பி.யாகி உள்ள தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம் பெற் றுள்ளார். இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் ஆகி இருக்கிறார். கனடாவில் ஒரு தமிழ் பெண் அமைச்சர் ஆகி இருப்பது இதுவே முதல் முறை.

இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத் துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சரோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார். கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967ஆம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங் குள்ள டொராண்டோ பல்கலைக்கழ கத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியவர் ஆவார். ஜான் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

அனிதா ஆனந்த் அமைச்சர் ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள் ளது.  இந்து நாகரிகத்தின் கனடா அருங் காட்சியகத்தின் தலைவர் பதவியையும் அனிதா ஆனந்த் வகித்துள்ளார். பிரத மர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சர வையில் இடம் பெற்றுள்ள 7 புதிய அமைச் சர்களில் அனிதா ஆனந்த் ஒருவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 3 பேருக்கு ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சர் பதவி அளித்துள்ளார். அவர் கள் 3 பேரும் சீக்கியர்கள் ஆவார்கள். மேலும் அவர்கள் முந்தைய அமைச்சர வையிலும் இடம் பெற்றிருந்தவர்கள். அவர்களில், ஹர்ஜித் சிங் சாஜனுக்கு (வயது 49) ராணுவ அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர் முந்தைய அமைச் சரவையிலும் ராணுவ அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நவ்தீப் பெயின்ஸ் (42), கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச் சர் ஆகி இருக்கிறார். பர்தீஷ் சாக்கர்(39), பன்முகம், உள்ளடக்கம், இளைஞர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுட்டுரையில், “புதிய அமைச்சரவை வலுவான, திறமையான அணி ஆகும். நிறைய பணிகள் காத்திருக் கின்றன. கனடாவை முன்னோக்கி அழைத் துச்செல்வதற்கு நாங்கள் தயாராக இருக் கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

- விடுதலை நாளேடு 23 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக