சனி, 14 மார்ச், 2020

கிரீஸின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

ஏதென்சு, மார்ச் 14- தென் கிழக்கு அய்ரோப்பிய நாடான கிரீ ஸின் முதல் பெண் அதிபரா கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேதரீனா சாகில்லாரொ போலு, வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கிரீஸ் அரசியலில் பெண் கள் மிகக் குறைந்த எண்ணிக் கையிலேயே உயர் பதவிக்கு வருவதாகவும் பிரதமர் கிரி யாகோஸ் மிட்ஸோதாகிஸ் தலைமையிலான அமைச்சர வையில் ஏறத்தாழ அனைவ ருமே ஆண்களாக இருப்பதா கவும் விமர்சிக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் பதவிக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதியான கேதரீனா சாகில்லா ரொபோலுவின் பெயரை மிட்ஸோதாகிஸ் கடந்த ஜன வரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக 261 வாக் குகளும், எதிராக 33 வாக்கு களும் பதிவாகின.

இந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு அவர் நாட்டின் அதிபராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார்.

கரோனா வைரஸ் பரவ லைத் தடுப்பதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக, அவரது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது நாடாளு மன்றத்துக்கு ஒரு சில உறுப் பினர்களே வந்திருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.

- விடுதலை நாளேடு 14 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக